என்ன ஜோக் காட்றீங்களா.. ஓசி டிக்கெட் வேண்டாமென டிராமா போட்ட பாட்டி.. அதிமுகவினர் மீது பாய்ந்த வழக்கு




கோவை: இலவச பயணச்சீட்டு குறித்து திமுக அரசுமீது அவதூறு பரப்பியதாகக் கோவையைச் சேர்ந்த அதிமுகவினர் மூவர் மீது கோவை காவல்துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளனர். பேருந்து பயணத்தில் கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் கேட்டுச் சண்டை போட்ட பாட்டியை இந்த வழக்கில் சாட்சியாக மட்டுமே சேர்த்துள்ளதாகக் கோவை மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதன் மூலமாகத் தங்களுக்கு மாதந்தோறும் பலநூறு ரூபாய் மிச்சமாவதாகப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.ஒட்டுமொத்த அளவில் தமிழக அரசின் பாராட்டைப் பெற்ற திட்டங்களில் ஒன்றாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமைந்துள்ளது. பெண்களுக்குப் போதிய இலவச பேருந்துகள் இயக்கப்படவில்லை என்ற சில குற்றச்சாட்டுகளும் இந்தத் திட்டத்தில் காணப்படுகிறது. பல பேருந்துகளில் கண்டக்டர்கள் மரியாதை குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SUTHAKAR

Post a Comment

Previous Post Next Post